வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது டெக்னாலஜி என்கிற அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனிதஇனங்கள், ஊமைகளாய்
செவிடர்களாய் போனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு ,முகநூல் ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய்
சிதிலமடைந்து போய்விட்டது.
Queen's English என்று பெருமை கொண்ட ஆங்கில மொழி சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து நான்கு எழுத்து வார்த்தைகள் ஒற்றை எழுத்தில் நிற்கும் வாக்கியங்களூக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம்..
தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட்டாலும் மின்னஞ்சல் வந்த பிறகு தாள் எடுத்துக் கடிதம் எழுதும் பழக்கமே போய்விட்டது. கடிதம் எழுதுவதே ஒரு கலையாக இருந்த ஒரு அற்புத காலம் இருந்தது. இரண்டே வரியானாலும் அன்பும் பாசமும் கரிசனமும் கனிவும் இழையோடும் சொற்கள் கோர்த்த கடிதங்கள். கண்ணீர் கக்கும், விரகம் தகிக்கும்,
ஏக்கம் மிளிரும் கடிதங்கள். ஒரு கார்டில் வெளிப்படையாய் எழுதப்பட்டிருக்கும்
அந்தரங்கங்கள். அதைக் கொண்டுவரும் தபால்காரர் அதை படித்து நமது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட தருணங்கள் அசாதாரண உறவுப் பாலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
கைப்பட எழுதும் கார்டில் வெளிப்படும் நட்பும் நேயமும் ஒரு பண்பின் , பண்பாட்டின் வெளிப்பாடாகவே இருந்தது. இப்போது
நமது உறவுகள் எல்லாம் முகநூல் வாயிலாக. திண்ணைப்பேச்சின் புதிய வடிவம். ஆனால் இது ஒருபோதை தரும் திண்னை. அதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம் -தம்மையே விளம்பரப்படுத்திக்கொள்ள, அல்லது தேவையற்ற விவாதங்களைக் கிளப்பி ஒருவர் மற்றவரைத் தூற்ற.
ஆக்கபூர்வமான நேரமெல்லாம் விரயமாகி புகைப்படங்கள்
நிரம்பிய- அப்பாவுடன்அம்மாவுடன், நாயுடன், சிநேகிதர்களூடன் விருந்தில் எடுத்த புகைப்படங்கள்--
பக்கங்களைப் பார்த்து யாருக்குஎன்ன லாபம் என்று புரியவில்லை.
ஏதோ ஒரு கற்பனை உலகத்தை நிஜமற்ற பொய்யான
ஏதோ ஒரு கற்பனை உலகத்தை நிஜமற்ற பொய்யான
உலகத்தைமெனக்கெட்டு சிருஷ்டிப்பது போல்
ஒரு மாயை விரிகிறது.நெருக்கமான எதையோ இழந்ததற்குப்
பரிகாரமாக , ஒரு தெரப்பியாக அதில் நவ யுகம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளப் பார்க்கிறதோ? முகநூல்அறிமுகமானபோது அது மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இப்பவும் முகநூலில் சிலர் முக்கிய உலக விஷயங்களை /இலக்கியங்களை ஆராய்ந்து பகிர்ந்துகொள்வது அறிவார்த்த
சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவது உண்மை.
பரிகாரமாக , ஒரு தெரப்பியாக அதில் நவ யுகம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளப் பார்க்கிறதோ? முகநூல்அறிமுகமானபோது அது மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இப்பவும் முகநூலில் சிலர் முக்கிய உலக விஷயங்களை /இலக்கியங்களை ஆராய்ந்து பகிர்ந்துகொள்வது அறிவார்த்த
சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவது உண்மை.
பலர் பல அரிய பணிகள் செய்வதைப்பற்றின தகவல் அதற்கென ஒரு வலை பின்ன உதவுகிறது. ஆனால் அநேகமாக முகநூல் வெறும் தேவையற்ற அக்கப்போர் பேசுவதற்கே உபயோகிக்கப்படுகிறது.
கணிசமான நேரத்தை விழுங்கிக்கொள்கிறது. நேரிடையான மனிதத்தொடர்பே அற்றுப் போகும் நிலையில் நாம்
இருக்கிறோம் என்று என்னை அச்சுறுத்துகிறது.
இருக்கிறோம் என்று என்னை அச்சுறுத்துகிறது.
2001- ஆண்டு நான் ஒரு நிகழ்வில் பங்கேற்க ஜப்பான் சென்றிருந்தேன்.பரபரப்பான சுறுசுறுப்பான நகர் புரத்துச்சூழலிலும் ஒரு அமைதியும்நம்பமுடியாத துப்புரவும் பிரமிப்பை ஏற்படுத்தின.
ரயில் பயணங்களில் புத்தகங்களைப் படித்தபடி
ஜப்பானியர் இருந்தனர்.சத்தமானப் பேச்சில்லை. உரத்த வாக்குவாதங்களை நான் கேட்கவில்லை.
ரயில் பயணங்களில் புத்தகங்களைப் படித்தபடி
ஜப்பானியர் இருந்தனர்.சத்தமானப் பேச்சில்லை. உரத்த வாக்குவாதங்களை நான் கேட்கவில்லை.
பாரம்பர்ய பண்பாட்டில் வளர்ந்த பெரியவர்களுக்கும்
நவீன உலகதாக்கத்தில் இருந்த இளைய தலைமுறைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுப்போனதால் பல சிக்கல்கள் புதிதாகக் கிளம்புவதாக
நான் சந்தித்த சில பெண்கள் சொன்னார்கள்.
முற்றிலும் மாறியிருக்கும் இன்றைய
இளையதலைமுறையினரின் உலகத்தை ஜப்பானிய எழுத்தாளர்
ஹாருக்கி முரக்காமி படம் பிடிப்பார். ஜப்பானிலா இப்படிஎன்று வியப்பேற்படும். அவரது பல நாவல்களைப் படித்திருக்கும்
எனக்கு அவர் வர்ணித்திருக்கும் வகையில் இளைஞர்கள் அங்கு
2001 -ல் காணப்படவில்லை.
நான் அங்கு இருந்தது ஐந்தே நாட்கள். நான் பார்த்த வரையில் சூழலில் ஒரு அமைதி இருப்பதாகத் தோன்றிற்று.
பணிக்குச் சென்று வீடு திரும்புகையில் ரயிலில் பயணம்
செய்பவர்களின் கையில் தப்பாமல் ஒரு புத்தகம் இருப்பதையும்
செய்பவர்களின் கையில் தப்பாமல் ஒரு புத்தகம் இருப்பதையும்
அதில் அவர்கள் ஆழ்ந்து போவதும்தான் எனக்கு பிரமிப்பாக இருந்தது. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கணினி டெக்னாலஜி புரட்சியில் ஜப்பான் வெகுவாக மாறிப்போனதாகத்தெரிகிறது. இன்று புத்தகம்
படிப்பவர்களே அங்கு இல்லை என்று
சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புலம்பியிருக்கிறார். மிகநவீன
படிப்பவர்களே அங்கு இல்லை என்று
சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புலம்பியிருக்கிறார். மிகநவீன
கைப்பேசியிலேயே எல்லோருடைய பொழுதுபோக்கு மற்றும் அறிவார்ந்த வேட்கைகள் சமாதானமாகி விடுகிறது என்கிறார்.
ஒருத்தருக்கொருத்தர் பேசுவதுகூட நின்றுபோனது என்கிறார்.
ஜப்பானிலிருந்து ஹாங்காங் சென்றபோது 2001-லேயே அங்கு நான் யார் கையிலும் புத்தகத்தைப் பார்க்கவில்லை. சயன்ஸ் ஃபிக்ஷன் படத்தைப் பார்ப்பதுபோல ஒரு அமானுஷ்ய
உணர்வு ஏற்பட்டது. தெருவில் போவோர் வருவோர்
கைபேசியில் யாரோ முகம்தெரியாத குரலுடன் பேசியபடி
இருந்தார்கள். அக்கம்பக்கத்து நடைமனிதர்களுடன் தொடர்பே
இல்லாதவர்களாகத் தோன்றினார்கள். இந்தியாவில் மொபைல் பேசி அப்போது அவ்வளவு சரளமாகவில்லை. ஹாங்காங்கில் நான் கண்டகாட்சி எனக்கு
மிக பயங்கரமாகத் தோன்றிற்று. யதார்த்த உலகத்திலிருந்து
மிக பயங்கரமாகத் தோன்றிற்று. யதார்த்த உலகத்திலிருந்து
மனிதர்கள் விலகிப் போனதாகப்பட்டது.
இப்போது பெங்களூரில் தெருவில் நடக்கும்போது அதேவகையான
காட்சியைக் காணுகிறேன். நேரில்சந்திக்கும்போது பேசத்திணறும் இளைஞர்கள் செல்பேசியில் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். யாரிடமோ.
காட்சியைக் காணுகிறேன். நேரில்சந்திக்கும்போது பேசத்திணறும் இளைஞர்கள் செல்பேசியில் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். யாரிடமோ.
ஆகாயத்தில் உலா வரும் தேவதைகளுடன் பேசுவதுபோல.
அல்லது செவியில் ஸ்பீக்கரைப் பொருத்திக்கொண்டு
சதா சர்வகாலமும் சினிமா பாட்டுகேட்கிறார்கள். எனக்கு
யாருடனும் நேருக்கு நேர் பேசவிருப்பமில்லை என்கிற சமிக்ஞை
விடுவதுபோல..
விடுவதுபோல..
முன்பு வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்துவைத்துப் பேச.
அவர்களும் காணாமல் போனார்கள் சாவித்ரி வைத்தியின்
விஷ்ராந்தியிலோ வேறு எங்கோ. அவர்கள் இல்லாமல் போனதில்
கதைசொல்ல எவருமில்லை. அதற்குத் தேவையில்லை. இப்போது பிறக்கும் குழந்தைகள் இண்டர் நெட் புலிகள். இரண்டு வயது குழந்தைகள் வலைத்தளங்களை மேய்கின்றன. ராமாயணமும்
மஹாபாரதமும் அனிமேஷனில் தெரிகின்றன.
பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் ஒருநாளைக்கு. பேச்சுமொழி
வழக்கொழிந்து போனால் ஒப்பாரி வைக்கக்கூடமுடியாது.
அதற்கும் சொற்கள் தேவை.
No comments:
Post a Comment